திங்கள், 20 ஆகஸ்ட், 2012

கவிதை


கும்பிடப்போன தெய்வம்

கும்பிடப்போன தெய்வம்
இப்போதெல்லாம்
அடிக்கடிக் குறுக்கே வருகிறது.

நான் எது கேட்டாலும்
தருவதாய் வாக்குறுதி கொடுக்கிறது.

உழைப்பைச் சுரண்டும் வழியறிய
பாமரனைத் தன் வலையில்
சிக்க வைக்க

கடுமையான  முயற்சியை 
முடங்க வைக்க

என எண்ணி நான் போகும்போது

“எனக்கு அபிசேகம் செய்தால்
நீ எண்ணியதைச் செய்வேன்” என்ற நிபந்தனையுடன்

இப்போதெல்லாம்
அடிக்கடிக் குறுக்கே வருகிறது
கும்பிடப் போன தெய்வம்.